Monday, January 6, 2020

Maruvaarthai - Sid Sriram Lyrics

Maruvaarthai - Video Song | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon - Sid Sriram Lyrics

Maruvaarthai - Sid Sriram Lyrics

Singer Sid Sriram
Singer Maruvaarthai
Music Darbuka Siva
Song Writer Thamarai
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாதை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு


Enai Noki Paayum Thota Lyrics

Maruvaarthai (மறு வார்த்தை பேசாதே)
Visiri (விசிறி)
Naan Pizhaippeno (நான் பிழைப்பேனோ)



Tags: Enai Noki Paayum Thota Songs Lyrics எனை நோக்கி பாயும் தோட்டா பாடல் வரிகள் Maruvaarthai Songs Lyrics மறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...